மார்கழி மகா உற்சவம் 2: அனைவருக்கும் உதவி செய்வோம்!

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச் | செய்யும் கிரிசைகள் கேளீரோ; பாற்கடலுள் ||

Dec 17, 2024 - 03:10
 0  4
மார்கழி மகா உற்சவம் 2: அனைவருக்கும் உதவி செய்வோம்!

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச் | செய்யும் கிரிசைகள் கேளீரோ; பாற்கடலுள் ||
பையத் துயின்ற பரமனடி பாடி | நெய்யுண்ணோம் பாலுண்ணோம; நாட்காலே நீராடி ||
மையிட்டெழுதோம்; மலரிட்டு நாம் முடியோம் | செய்யாதன செய்யோம்; தீக்குறளை சென்றோதோம்||
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி | உய்யுமாறு எண்ணி உகந்தேலோ ரெம்பாவாய் || (திருப்பாவை 2)

மாதங்களில் தான் மார்கழி என்று கூறுகிறான் அந்தக் கண்ணன். இந்த பூவுலகில் வாழும் அனைவரும் பாவை நோன்புக்கு தயாராக இருக்க வேண்டும், இந்த நோன்புக்கு செய்ய வேண்டிய வற்றை அறிந்து கொள்வீர். திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள ஸ்ரீமன் நாராயணனின் பாதங் களைப் போற்றிப் பாடுவோம். நெய், பால் கலந்த உணவை தவிர்ப்போம். அதிகாலையில் உறக்கம் தவிர்த்து, எழுந்து நீராடுவோம். எவ்வித அலங்காரமும் வேண்டாம். நம்மை நாடி வருவோருக்கு இல்லை என்று சொல்ல மாட்டோம். நாம் உய்வை அடைய இதுவே வழியென நினைத்து பாவை நோன்பை நோற்போம் என்று ஆண்டாள் தனது தோழிகளை அழைக்கிறாள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow