மழைக் காலத்தில் ஃப்ளூ, டெங்கு பாதிப்பு வராமல் தடுப்பது எப்படி?
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழைக் காலம் தொடங்கியுள்ளது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழைக் காலம் தொடங்கியுள்ளது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், பருவ மழைக் காலங்களில், பல்வேறு விதமான வைரஸ் காய்ச்சல் பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்து மருத்துவ வல்லுநர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.
இது குறித்து கோவை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் பாலுசாமி, கோவை அரசு மருத்துவமனை ‘டீன்’ கீதாஞ்சலி ஆகியோர் கூறும்போது, “பருவ மழைக் காலம் தொடங்கிய நிலையில் மாவட்டம் முழுவதும் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றுக்கு வரும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
What's Your Reaction?