மழை நீர் ஏன் எளிதில் கெட்டுப் போவதில்லை? | டிங்குவிடம் கேளுங்கள்
மழை நீர் சுவையோ மணமோ இன்றி, தூய்மையாக உருவாகிறது. அந்த மழை நீர் காற்று மண்டலத்தில் நுழையும்போது தூசு, மகரந்தம், ரசாயனம் போன்றவை சேர்ந்து, பூமியில் விழுகிறது.

மழைநீரைப் பிடித்து வைத்து, நீண்ட நாள்களுக்குப் பயன்படுத்தினாலும் நன்றாக இருக்கிறது. குழாயில் வரும் நீரில் சில நாள்களிலேயே நாற்றமும் புழுவும் வருகிறதே ஏன், டிங்கு? - ஜா. அகமது ஜாபிர், 8-ம் வகுப்பு, அரசு உயர்நிலைப் பள்ளி, அமரடக்கி, புதுக்கோட்டை.
மழை நீர் சுவையோ மணமோ இன்றி, தூய்மையாக உருவாகிறது. அந்த மழை நீர் காற்று மண்டலத்தில் நுழையும்போது தூசு, மகரந்தம், ரசாயனம் போன்றவை சேர்ந்து, பூமியில் விழுகிறது. அப்படி விழும் மழை நீரை நாம் எப்படிப் பிடித்து, வடிகட்டி, பாதுகாக்கிறோம் என்பதைப் பொறுத்து மழை நீர் நீண்ட நாள்களுக்குக் கெட்டுப் போகாமல் இருக்கிறது.
What's Your Reaction?