மலையாள சினிமாவில் எல்லை மீறலுக்கு காரணம் என்ன? - சுஹாசினி விளக்கம்

“மலையாள சினிமாவில் படப்பிடிப்பு முடிந்ததும் நீங்கள் அங்கேயே தங்கியிருக்க வேண்டிய சூழலால் எல்லை மீறல்கள் நடக்கிறது” என நடிகை சுஹாசினி தெரிவித்துள்ளார். 

Nov 26, 2024 - 16:00
 0  2
மலையாள சினிமாவில் எல்லை மீறலுக்கு காரணம் என்ன? - சுஹாசினி விளக்கம்

கோவா: “மலையாள சினிமாவில் படப்பிடிப்பு முடிந்ததும் நீங்கள் அங்கேயே தங்கியிருக்க வேண்டிய சூழலால் எல்லை மீறல்கள் நடக்கிறது” என நடிகை சுஹாசினி தெரிவித்துள்ளார்.

கோவாவில் 55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இதில் ‘சினிமாவில் பெண்களின் பாதுகாப்பு’ என்ற தலைப்பில் நடந்த நிகழ்வில் நடிகை சுஹாசினி கலந்துகொண்டு பேசினார். அவர் கூறுகையில், “மற்ற துறைகளை காட்டிலும் வித்தியாசமானது சினிமா துறை. மற்ற துறைகளில் நீங்கள் வேலை முடிந்ததும் வீட்டுக்குச் சென்றுவிடலாம். ஆனால், சினிமாவில் அப்படியில்லை. 200, 300 பேர் ஓரிடத்துக்குச் சென்று அங்கேயே ஒரு குடும்பம் போல தங்கியிருப்பார்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow