‘மரியே வாழ்க’, ‘ஆவே மரியா’ முழக்கத்துடன் வேளாங்கண்ணி பேராலய பெரிய தேர் பவனி கோலாகலம்
இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா ஆக. 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா பெரிய தேர் பவனி நேற்று இரவு கோலாகலமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா ஆக. 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, தினமும் சிறப்பு பிரார்த்தனை, நவநாள் திருப்பலி, மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசி உள்ளிட்டவை நடைபெற்றன.
இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர் பவனி நேற்று இரவு கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி, பேராலய கலையரங்கில் மாலை புதுச்சேரி - கடலூர் உயர் மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையில் கூட்டுப் பாடல் திருப்பலி நடைபெற்றது. பின்னர், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரை பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் புனிதம் செய்து வைத்தார். தொடர்ந்து, பெரிய தேரில் புனித ஆரோக்கிய அன்னை எழுந்தருளினார்.
What's Your Reaction?