ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் இன்று தொடக்கம்

திருப்பதி ஏழு​மலை​யான் கோயில் பிரம்​மோற்சவ விழா இன்று மாலை கொடியேற்​றத்​துடன் தொடங்​கு​கிறது. ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு இன்று சுவாமிக்கு பட்டு வஸ்​திரத்தை காணிக்​கை​யாக வழங்க உள்​ளார்.

Sep 24, 2025 - 08:45
 0  3
ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் இன்று தொடக்கம்

திருமலை: திருப்பதி ஏழு​மலை​யான் கோயில் பிரம்​மோற்சவ விழா இன்று மாலை கொடியேற்​றத்​துடன் தொடங்​கு​கிறது. ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு இன்று சுவாமிக்கு பட்டு வஸ்​திரத்தை காணிக்​கை​யாக வழங்க உள்​ளார். உலக பிரசித்தி பெற்ற திருப்​பதி ஏழு​மலை​யான் கோயில் பிரம்​மோற்சவ விழா இன்று மாலை கொடியேற்​றத்​துடன் தொடங்​கி, அக்​டோபர் 2-ம் தேதி சக்கர ஸ்நானத்​துடன் நிறைவடைய உள்​ளது.

பக்​தர்​கள் திரு​மலைக்கு வந்து செல்ல 24 மணி நேர​மும் திருப்​ப​தி​யில் இருந்து பேருந்து போக்​கு​வரத்து வசதி, தலை​முடி காணிக்​கை, மூல​வரின் தரிசனம், அன்​னபிர​சாதம், வாகன சேவை​களை கண்டு களிக்க மாட வீதி​களில் சிறப்பு வசதி​களை தேவஸ்​தானம் செய்​துள்​ளது. திரு​மலைக்கு வரும் பக்​தர்​கள் தங்​குவதற்கான அறை​கள் ரு.50 முதல் 600 வரை மிக குறைந்த வாடகைக்கு வழங்​கப்பட உள்​ளன. இதற்​காக திரு​மலை​யில் 3,500 அறை​கள் ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow