பெற்றோரை இழந்த பெண்ணுக்கு தந்தையாக நின்று சொந்த செலவில் திருமணம் நடத்திய ஐஏஎஸ் அதிகாரி!

பெற்றோரை இழந்த பெண்ணுக்கு தந்தையாக நின்று சொந்த செலவில் திருமணம் நடத்திய ஐஏஎஸ் அதிகாரி!

Jun 30, 2025 - 16:05
 0  4
பெற்றோரை இழந்த பெண்ணுக்கு தந்தையாக நின்று சொந்த செலவில் திருமணம் நடத்திய ஐஏஎஸ் அதிகாரி!

பெற்றோரை இழந்த பெண்ணுக்கு தந்தையாக நின்று, தனது செலவில் திருமணத்தை நடத்திவைத்த தஞ்சாவூர் மாவட்ட முன்னாள் ஆட்சியரும், தற்போதைய பத்திரப் பதிவுத் துறை தலைவருமான தினேஷ் பொன்ராஜ் ஆலிவரின் மனிதநேய செயலை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே ரெட்டவயல் பகுதியைச் சேர்ந்த கண்ணையா- செல்வி தம்பதியின் மூத்த மகள் பாண்டி மீனா, நர்சிங் படித்தவர். 2-வது மகள் பாண்டீஸ்வரி. கண்ணையா நுரையீரல் பாதிப்பாலும், செல்வி சிறுநீரக பாதிப்பாலும் சில ஆண்டுகளுக்கு முன் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதில் நிலை குலைந்து போன பாண்டி மீனா, 2022-ம் ஆண்டு தஞ்சாவூர் ஆட்சியராக இருந்த தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை சந்தித்து, தான் வசிக்கும் வீட்டின் புகைப்படத்துடன் தனது நிலையை எடுத்துக் கூறி உதவி கேட்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow