‘பெரிய பகவதி’ சென்னை என்றால் ‘சின்ன பகவதி’ கோவை?

தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்து கவனம் பெறும் பெருநகரம் கோயம்புத்தூர். கோவை என்றால் சிறுவாணித் தண்ணீரும், மரியாதைக் கலந்த பேச்சும்தான் பெரும்பாலானோரின் நினைவுக்கு வரும்.

Nov 21, 2024 - 09:35
 0  2
‘பெரிய பகவதி’ சென்னை என்றால் ‘சின்ன பகவதி’ கோவை?

தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்து கவனம் பெறும் பெருநகரம் கோயம்புத்தூர். கோவை என்றால் சிறுவாணித் தண்ணீரும், மரியாதைக் கலந்த பேச்சும்தான் பெரும்பாலானோரின் நினைவுக்கு வரும். ஆனால், இணையவாசிகளால் ‘கோவையன்ஸ்’ எனச் செல்லமாக அழைக்கப்படும் கோவை மக்களின் ‘ஆன்லைன் அட்ராசிட்டி’யோ தனி ரகம்!

பொறியியல், மருத்துவம், வேளாண்மை, கலை என எந்தப் படிப்பானாலும் கோவையில் அந்தப் படிப்புகளுக்கான தரமான கல்லூரிகளைப் பார்க்க முடியும். இதில் மாநிலத்தின், நாட்டின் சிறந்த கல்லூரிகள் எனப் பெயர் பெற்ற கல்வி நிலையங்களும் அடங்கும். வெயில், மழை எதுவானாலும் ஆண்டு முழுவதும் சீரான வானிலையைக் கொண்ட ‘அதிசய பூமி’ கோவை என்பதாலேயே, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் இங்கு வந்து கல்வி பயில்கிறார்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow