பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

சிவகங்கை மாவட்​டம், திருப்​பத்​தூர் அருகே பிள்​ளை​யார்​பட்டி​யில் அமைந்​துள்ள கற்பக விநாயகர் கோயி​லில் சதுர்த்தி விழா கொடியேற்​றுடன் நேற்று தொடங்​கியது.

Aug 19, 2025 - 07:05
 0  3
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருப்பத்தூர்: சிவகங்கை மாவட்​டம், திருப்​பத்​தூர் அருகே பிள்​ளை​யார்​பட்​டி​யில் அமைந்​துள்ள கற்பக விநாயகர் கோயி​லில் சதுர்த்தி விழா கொடியேற்​றுடன் நேற்று தொடங்​கியது. பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோயி​லில் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்​கள் விமரிசை​யாக நடை​பெறு​வது வழக்​கம். அதன்​படி, இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா, கொடியேற்​றத்துடன் நேற்று தொடங்​கியது.

இதையொட்​டி, சண்​டிகேசுவரர் சந்​நி​தி​யில் இருந்து கொடி புறப்​பாடாகி, கோயிலை வலம் வந்​தது.தொடர்ந்​து, கொடி மரம் அருகே உற்சவ விநாயகர், சண்​டிகேசுவரர், அங்​குசத்​தேவர் எழுந்​தருளினர். பின்​னர், கொடிமரத்​துக்​கும், மூஞ்​சூறு வாக​னம் வரையப்​பட்ட கொடிப்​படத்​துக்​கும் சிறப்பு பூஜைகள் நடை​பெற்​றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow