திருவானைக்காவல் கோயிலில் அம்மனுக்கு தாடங்கம் மெருகூட்டி அணிவிப்பு: ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்பு
திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மனின் காதுகளில் தாடங்கங்கள் எனப்படும் காதணிகள் தூய்மை செய்து, மெருகூட்டி நேற்று அணிவிக்கப்பட்டன. இதில், காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்றார்.

திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மனின் காதுகளில் தாடங்கங்கள் எனப்படும் காதணிகள் தூய்மை செய்து, மெருகூட்டி நேற்று அணிவிக்கப்பட்டன. இதில், காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்றார்.
அகிலாண்டேஸ்வரி அம்மனின் காதுகளில் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட தோடுகளை குறிப்பிட்ட காலஇடைவெளியில் காஞ்சி மடம் சார்பில் தூய்மை செய்து மெருகூட்டப்பட்டு, மீண்டும் அணிவிப்பது வழக்கம். அதன்படி, அம்மனின் காதணிகள் மெருகூட்டி மீண்டும் நேற்று அணிவிக்கப்பட்டன.
What's Your Reaction?