பல்லுயிர் பாரம்பரிய தளம் கோரிக்கை: எலத்தூர் குளத்தில் கள ஆய்வு
எலத்தூர் குளம், நாகமலை குன்றை பல்லுயிர் பாரம்பரிய தளமாக அறிவிக்க கோரிக்கை எழுந்ததைத் தொடர்ந்து முதன்மை தலைமை வனப் பாதுகாவலர், செயலாளர் கள ஆய்வு மேற்கொண்டனர்.

எலத்தூர் குளம், நாகமலை குன்றை பல்லுயிர் பாரம்பரிய தளமாக அறிவிக்க கோரிக்கை எழுந்ததைத் தொடர்ந்து முதன்மை தலைமை வனப் பாதுகாவலர், செயலாளர் கள ஆய்வு மேற்கொண்டனர்.
568 உயிரினங்கள் வாழும் எலத்தூர் குளம் மற்றும் 422 உயிரினங்கள் வாழும் நாகமலைக் குன்று காடு ஆகியவற்றை அங்குள்ள பல்லுயிர்களின் முக்கியத்துவம் சார்ந்தும், தொன்மையை பாதுகாக்கும் நோக்கிலும் கடந்த ஆண்டு சூழல் அறிவோம் குழுவினரால் உயிரிப் பல்வகைமை சட்டத்தின் கீழ் பல்லுயிர் பாரம்பரிய தளமாக (Biodiversity Heritage Site - BHS) அறிவிக்க அரசுக்கு வேண்டுகோள் வைக்கப்பட்டது.
What's Your Reaction?