நீர் மின்னுற்பத்தி 2024-25: மத்திய மின்சார ஆணையம் நிர்ணயித்த இலக்கை அடைந்த தமிழக மின்வாரியம்!

மத்திய மின்சார ஆணையம் 2024-25ம் ஆண்டில் நிர்ணயித்த மின்னுற்பத்தி இலக்கை விட அதிக அளவு நீர் மின்னுற்பத்தி செய்து தமிழக மின்வாரியம் இலக்கை அடைந்துள்ளது. 

Feb 11, 2025 - 17:00
 0  4
நீர் மின்னுற்பத்தி 2024-25: மத்திய மின்சார ஆணையம் நிர்ணயித்த இலக்கை அடைந்த தமிழக மின்வாரியம்!

சென்னை: மத்திய மின்சார ஆணையம் 2024-25-ம் ஆண்டில் நிர்ணயித்த மின்னுற்பத்தி இலக்கை விட அதிக அளவு நீர் மின்னுற்பத்தி செய்து தமிழக மின்வாரியம் இலக்கை அடைந்துள்ளது.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறும்போது, “தமிழகத்தில் நீர் மின்னுற்பத்தி செய்வதற்காக 2,321.90 மெகாவாட் திறனில் 47 நீர் மின்னுற்பத்தி நிலையங்கள் உள்ளன. ஈரோடு, கடம்பாறை, குந்தா மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இந்த மின்நிலையங்கள் அமைந்துள்ளன. மின்னுற்பத்தியில் இந்த நீர்மின் நிலையங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தினமும் ஒரு கோடி யூனிட் என்ற அளவில் மின்னுற்பத்தி செய்யப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow