நீச்சல் தெரியாத சிங்கக்குட்டி | கதை
“பயப்படாதீர்கள் இளவரசரே, நான் அருகில்தான் இருப்பேன். நீங்கள் நீருக்குள் மூழ்கினால் உங்களை மேலே தூக்கிக் கொண்டு வந்துவிடுவேன். நீரில் இறங்காமல் நீந்தக் கற்றுக்கொள்ள முடியாது.” சிங்கக்குட்டி ஆற்றில் இறங்க மறுத்து, குகைக்குத் திரும்பிவிட்டது.

குறிஞ்சிக்காட்டின் சிங்கராஜாவுக்குத் தன் குட்டியை நினைத்துக் கவலையாக இருந்தது. மலையடி வாரத்தில் இருந்த காட்டில் அடிக்கடி மழை பெய்து, வெள்ளம் சூழ்ந்துகொள்ளும். அதனால் காட்டிலுள்ள விலங்குகள் நன்றாக நீந்தக் கற்று வைத்திருந்தன. ஆனால், சிங்கக்குட்டிக்கு மட்டும் நீச்சல் தெரியவில்லை.
சிங்கராஜா சற்று உயரமான குகையில்தான் வசித்தது. காட்டில் வெள்ளம் வந்தாலும் குகைக்குப் பாதிப்பு வராது. அதனால் சிங்கக்குட்டி குகையை விட்டு வெளியே வராமல் இருந்தது. தனக்குப் பிறகு அரசனாகப் போகிற சிங்கக்குட்டி இப்படி பயப்படுகிறானே என்று வருத்தப்பட்டது சிங்கராஜா.
What's Your Reaction?