எனக்கு நம்மாழ்வாரே கதி | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 20
பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான மதுரகவியாழ்வார் ஓர் அமைதியான புரட்சியாளர். மற்ற ஆழ்வார்கள் நாராயணனே கதி என்று பாட , மதுரகவியாழ்வாரோ நம்மாழ்வாரே கதி என்று அவர் மேல் பன்னிரண்டு பாசுரங்களைப் பாடினார்.

பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான மதுரகவியாழ்வார் ஓர் அமைதியான புரட்சியாளர். மற்ற ஆழ்வார்கள் நாராயணனே கதி என்று பாட , மதுரகவியாழ்வாரோ நம்மாழ்வாரே கதி என்று அவர் மேல் பன்னிரண்டு பாசுரங்களைப் பாடினார்.
நம்மாழ்வார் அவரது ஞானகுரு. ஓர் ஒளிப்பிழம்பாக வானில் தோன்றி, தன்னை வடநாட்டிலிருந்து தென்னாட்டில் இருக்கும் ஆழ்வார் திருநகரிக்கு (குருகூர் ) அழைத்து வந்து சீடனாக ஏற்றருளிய நம்மாழ்வாருக்கு அவர் வாழ்நாள் முழுதும் நன்றிக்கடன் பட்டிருந்தார். நம்மாழ்வார் திருநாடு அலங்கரித்த பிறகும் அவரது குருபக்தி குன்றவில்லை.
What's Your Reaction?