நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடைகளால் மாலை அலங்காரம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் நேற்று சுவாமிக்கு 1,00,008 வடைகளால் ஆன மாலை அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

நாமக்கல்: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் நேற்று சுவாமிக்கு 1,00,008 வடைகளால் ஆன மாலை அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
நாமக்கல் கோட்டை சாலையில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி அமாவாசை நாளில் மூல நட்சத்திரத்தில் அனுமன் ஜெயந்தி விழா வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக அனுமன் ஜெயந்தியன்று சுவாமிக்கு கட்டளைதாரர்கள் மூலம் 1 லட்சத்து 8 வடைகளால் ஆன மாலை சாத்தப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
What's Your Reaction?