14 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்
முருகப் பெருமானின் முதல்படை வீடான சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று அதிகாலை கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி, 3 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மதுரை: முருகப் பெருமானின் முதல்படை வீடான சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று அதிகாலை கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி, 3 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 14 ஆண்டுகளுக்கு பிறகு இன்று கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி, கடந்த சில மாதங்களாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. உபயதாரர் மூலம் ரூ.70 லட்சத்தில்ராஜகோபுரம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. ரூ.2.44 கோடியில் ராஜகோபுரத்தில் 7 தங்க கலசம், அம்பாள் சந்நிதி மற்றும் கணபதி கோயிலில் தலா ஒரு கலசம் என 9 கலசங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
What's Your Reaction?