குழந்தைகளை தெய்வீக சூழலில் வளர்க்க வேண்டும்: ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளுரை
குழந்தைகளை தெய்வீக சூழலில் வளர்த்தால், அவர்களது வாழ்க்கை மிகவும் பிரகாசமாக இருக்கும் என்று காஞ்சி காமகோடி பீடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளுரை வழங்கியுள்ளார்.

சென்னை: குழந்தைகளை தெய்வீக சூழலில் வளர்த்தால், அவர்களது வாழ்க்கை மிகவும் பிரகாசமாக இருக்கும் என்று காஞ்சி காமகோடி பீடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளுரை வழங்கியுள்ளார். கர்நாடக மாநிலத்தில் கடந்த 3 வார காலமாக விஜய யாத்திரையில் இருக்கும் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், கடந்த 17-ம் தேதி எடநீர் மடத்துக்கு விஜயம் செய்தார்.
மடத்தின் சார்பில் பீடாதிபதி ஸ்ரீ சச்சிதானந்த பாரதி சுவாமிகள், அவரை வரவேற்றார். பின்னர் குக்கே சுப்பிரமண்யா கோயில் உள்ளிட்ட கோயில்களில் சுவாமி தரிசனம் செய்த ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், கடந்த 20-ம் தேதி உடுப்பி வந்தடைந்தார். ஸ்ரீ கிருஷ்ணா மடத்தின் சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மத்வ சம்பிரதாயப்படி சுவாமிகளுக்கு புஷ்பாஞ்சலி, பொரியிட்டு மரியாதை செய்யப்பட்டது.
What's Your Reaction?