நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு ரங்கநாதர் கோயிலில் தாயார் திருவடி சேவை: திரளான பக்தர்கள் பங்கேற்பு
நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தாயார் ரங்கநாச்சியார் திருவடி சேவை நேற்று நடைபெற்றது

திருச்சி: நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தாயார் ரங்கநாச்சியார் திருவடி சேவை நேற்று நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தாயார் ரங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம் அக். 4-ம் தேதிதொடங்கியது. இதையொட்டி, ரங்கநாச்சியார் மூலஸ்தானத்திலிருந்து தினமும் மாலை புறப்பட்டுகொலு மண்டபத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார்.
What's Your Reaction?