நம்மாழ்வாரே எனக்கு நாராயணன் | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 21
நம் பெற்றோருக்கும் அப்பெற்றோரைப் பெற்ற இறைவனுக்கும் நடுவே நிற்பவர் குருநாதர். நடுநாயகமாக நிற்பதால் பெற்றோரின் நற்குணங்களையும் இறைவனின் சற்குணங்களையும் ஒருங்கே பெற்றவர்.

நம் பெற்றோருக்கும் அப்பெற்றோரைப் பெற்ற இறைவனுக்கும் நடுவே நிற்பவர் குருநாதர். நடுநாயகமாக நிற்பதால் பெற்றோரின் நற்குணங்களையும் இறைவனின் சற்குணங்களையும் ஒருங்கே பெற்றவர்.
தன்னை நம்பி வரும் சீடனைத் தனதாக்குபவர். தன் ஞானத்தால் ஒருநாள் தன்னைப்போல் ஆக்குபவர். ‘நான்’ என்பதைத் தொலைத்தவர். எங்கெல்லாம் 'நான்' இருக்கிறதோ அவற்றைத் தொலைப்பவர். எல்லா சாத்திரங்களையும் பழுதறக் கற்றவர். அதே சமயத்தில் சாத்திரம் கடந்த பரஞான அனுபவத்தையும் பெற்றவர்.
What's Your Reaction?