ஒரு தோழியின் இசையஞ்சலி | சினிப்பேச்சு
இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் தேதி காலமானார். அவரது மறைவின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு குடும்பத் தினரும் நண்பர்களும் பவதாரிணியுடனான நினைவுகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் தேதி காலமானார். அவரது மறைவின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு குடும்பத் தினரும் நண்பர்களும் பவதாரிணியுடனான நினைவுகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வரிசையில் பவதாரிணியின் நெருங்கிய தோழியும் பிரபலப் பின்னணிப் பாடகியுமான ஷாலினி சிங், இசையஞ்சலி ஒன்றை நிகழ்த்த இருக்கிறார். அது பற்றித் தனது சமூக வலைதளப் பக்கத்தில்: “இசையையும் பாடல்களையும் நீங்கள் எவ்வளவு நேசித்தீர்கள் என்பது எனக்குத் தெரியும். உங்கள் பிறந்தநாளில், எனக்குத் தெரிந்த விதத்தில், இசை மூலம் உங்களைக் கௌரவிக்க விரும்புகிறேன்.
What's Your Reaction?