தொழிலதிபர் ஆனந்த் அம்பானியிடம் ரூ.22.5 கோடி மதிப்புள்ள கைக்கடிகாரம்
தொழிலதிபர் ஆனந்த் அம்பானியிடம் ரூ.22.5 கோடி மதிப்புள்ள கைக்கடிகாரம் இருக்கும் செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புதுடெல்லி: ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி. ரிலையன்ஸ் நிறுவனத்தின் பல்வேறு பொறுப்புகளில் இருக்கும் ஆனந்த் அம்பானிக்கு, கடந்த ஆண்டு தொழிலதிபர் விரேன் மெர்ச்சண்டின் மகள் ராதிகா மெர்ச்சண்டை திருமணம் செய்துகொண்டார். பெரும் செலவில் நடைபெற்ற இந்தத் திருமணம் உலக மக்களை வியப்பில் ஆழ்த்தியது.
இந்நிலையில் ஆனந்த் அம்பானி தனது கைகளில் ரூ.22.5 கோடி மதிப்புள்ள விலை உயர்ந்த கடிகாரத்தை அணிந்துள்ளார். இந்த செய்தி தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. நீல நிறத்தில் கண்ணைப் பறிக்கும் வகையில் இந்த விலை உயர்ந்த கடிகாரத்தை ஆனந்த் அம்பானி அணிந்திருக்கும் புகைப்படம் இணையதளத்தில் பரவி வருகிறது.
What's Your Reaction?