திருச்செந்தூரில் இன்று மகா கும்பாபிஷேக விழா: தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று (7-ம் தேதி) நடைபெறுகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் குவிந்துள்ளனர்.

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று (7-ம் தேதி) நடைபெறுகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் குவிந்துள்ளனர்.
அறுபடை வீடுகளில் 2-வது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருப்பணிகள் நிறைவுபெற்று, கும்பாபிஷேக விழா ஜூன் 26-ம் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது. கடந்த 1-ம் தேதி மாலையாகசாலை பூஜைகள் தொடங்கின. கரியமாணிக்க விநாயகர், பார்வதி அம்மன், மூலவர், வள்ளி, தெய்வானைக்கு கோயில் உள்புறம் தந்திரி சுப்பிரமணியரு தலைமையிலும், சுவாமி சண்முகர் மற்றும் பரிவாரமூர்த்திகளுக்கு ராஜகோபுரத்தின் கீழ் உள்ள பிரம்மாண்ட யாகசாலையில் 71 ஹோம குண்டங்கள் அமைத்து, 700 கும்பங்கள் வைக்கப்பட்டு. 96 மூலிகைகள் இடப்பட்டு பிச்சை சிவாச்சாரியார் தலைமையிலும் பூஜைகள் நடைபெற்றன.
What's Your Reaction?