தமிழக அரசு நடப்பு ஆண்டுக்கான மின் கட்டண உயர்வை ரத்து செய்ய தொழில் துறையினர் கோரிக்கை
தமிழக அரசு இந்த ஆண்டு மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோடை காலத்தில் மின்தடை ஏற்படாமல் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசுக்கு தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை: தமிழக அரசு இந்த ஆண்டு மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், கோடைக் காலத்தில் மின்தடை ஏற்படாமல் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தொழில் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு அனைத்து தொழில்முனைவோர் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் ஜெயபால் கூறும்போது, "ஏற்கெனவே மூலப்பொருட்கள் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வு போன்றவற்றால் தொழில் துறையினர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஆண்டுதோறும் மின் கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை தமிழக அரசு நடைமுறைபடுத்தி வருகிறது.
What's Your Reaction?