ஞாபகம் வருதே... மதுரையில் 60 ஆண்டுக்கு முன்பு வசித்த காவல் துறை குடும்பத்தினர் சந்திப்பு!
மதுரையில் 60 ஆண்டுகளுக்கு முன்பு ஒரே இடத்தில் வசித்த முன்னாள் காவல் துறையினர், அவர்களது குடும்பத்தினர் சந்திப்பு நிகழ்ச்சி மதுரை அருகே புதன்கிழமை நடந்தது. இதில் பங்கேற்றவர்கள் தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்து மகிழ்ந்தனர்.

மதுரை: மதுரையில் 60 ஆண்டுகளுக்கு முன்பு ஒரே இடத்தில் வசித்த முன்னாள் காவல் துறையினர், அவர்களது குடும்பத்தினர் சந்திப்பு நிகழ்ச்சி மதுரை அருகே புதன்கிழமை நடந்தது. இதில் பங்கேற்றவர்கள் தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்து மகிழ்ந்தனர்.
மதுரை, ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல் துறையில் பணிபுரியும் காவலர்களுக்கென 60 ஆண்டுகளுக்கு முன்பாக மதுரை ரிசர்வ் லைன் ஆயுதப்படை மைதான குடியிருப்பு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்தனர். பல்வேறு இடங்களில் பணிபுரிந்தாலும் தாங்கள் வசிப்பிடமான ஏஆர் லைன் பகுதியில் அனைவரும் ஒரே பகுதியில் வசித்ததால் ஒருவருக்கொருவர் குடும்ப உறுப்பினர்கள் போன்று பழகி நட்பை நீடித்து வந்துள்ளனர்.
What's Your Reaction?