ஜெய்ஹிந்துபுரத்தின் இளவரசி: வேண்டும் வரம் தரும் வீரமாகாளியம்மன்!

மதுரை ஜெய்ஹிந்துபுரத்தின் இளவரசியாகிய வீரமாகாளியம்மன், வேண்டுவோருக்கு வேண்டும் வரங்களை அள்ளித் தருவதால், அப்பகுதி மக்கள் காளியம்மனை சிரத்தையோடு வழிபட்டு வருகின்றனர்.

Dec 27, 2024 - 18:10
 0  4
ஜெய்ஹிந்துபுரத்தின் இளவரசி: வேண்டும் வரம் தரும் வீரமாகாளியம்மன்!

மதுரை ஜெய்ஹிந்துபுரத்தின் இளவரசியாகிய வீரமாகாளியம்மன், வேண்டுவோருக்கு வேண்டும் வரங்களை அள்ளித் தருவதால், அப்பகுதி மக்கள் காளியம்மனை சிரத்தையோடு வழிபட்டு வருகின்றனர்.

பாண்டிய நாட்டின் சிறந்த பகுதியாய் விளங்கும் மதுரையம்பதியின் தென்மேற்கு திசையின் புறநகராக இருந்த ஜெய்ஹிந்துபுரத்தின் வயல்வெளிப் பகுதியில் சிறிய குத்துக்கல் வடிவில் மந்திர எழுத்துடன் அம்மன் காட்சி அளித்துள்ளார். அவ்வாறு கண்டு எடுக்கப்பட்ட அம்மனை, கிராமப் பெரியோர்கள் அனைவரும் ஒன்றுகூடி 22.3.1952-ம் ஆண்டு பங்குனி மாதம் வெள்ளிக்கிழமையன்று வீரமாகாளியம்மன் என்று திருப்பெயர் சூட்டினர். பின்னர், ஜெய்ஹிந்துபுரம் 2-வது முக்கிய வீதியின் வடக்குப் பகுதியில் கிழக்கு நோக்கி வீரமாகாளியம்மனை பிரதிஷ்டை செய்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow