“ஜம்மு காஷ்மீரின் தொழில் துறை சூழலில் முன்னெப்போதும் இல்லாத முன்னேற்றம்” - துணைநிலை ஆளுநர்

ஜம்மு காஷ்மீரில் தொழில்துறைக்கான சூழல், கடந்த சில ஆண்டுகளில் முன்னெப்போதும் இல்லாத முன்னேற்றத்தைக் கண்டுள்ளது என்று துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார். யூனியன் பிரதேசம் துடிப்பான ஸ்டார்ட் அப் மையமாக மாறி இருப்பதற்கு அரசாங்கத்தின் முயற்சிகளே காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். 

Jan 24, 2025 - 18:30
 0  4
“ஜம்மு காஷ்மீரின் தொழில் துறை சூழலில் முன்னெப்போதும் இல்லாத முன்னேற்றம்” - துணைநிலை ஆளுநர்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தொழில் துறைக்கான சூழல், கடந்த சில ஆண்டுகளில் முன்னெப்போதும் இல்லாத முன்னேற்றத்தைக் கண்டுள்ளது என்று துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார். யூனியன் பிரதேசம் துடிப்பான ஸ்டார்ட் அப் மையமாக மாறி இருப்பதற்கு அரசாங்கத்தின் முயற்சிகளே காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜம்மு ஐஐஎம்-ல் நடைபெற்ற 'பிரிக்ஸ் இளைஞர் கவுன்சில் தொழில்முனைவோர் ரன்-அப் நிகழ்வை' தொடங்கி வைத்துப் பேசிய மனோஜ் சின்ஹா, "கடந்த சில ஆண்டுகளில், ஜம்மு காஷ்மீரின் தொழில்துறை சூழல் முன்னெப்போதும் இல்லாத எழுச்சியைக் கண்டுள்ளது. இது புதுமை, ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் அறிவியல் முன்னேற்றங்களின் கலாச்சாரத்தை வளர்த்துள்ளது. நாட்டின் உயர்மட்ட தொழில்முனைவோர்களில் நமது இளைஞர்களும் அதன் வளர்ச்சிக்கு பங்களிப்பதை நான் பார்க்க விரும்புகிறேன்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow