காஞ்சிபுரம் ஜரிகை ஆலை பொலிவுடன் செயல்பட்டு வருகிறது: அமைச்சர் ஆர்.காந்தி விளக்கம்

தமிழ்நாடு ஜரிகை லிமிடெட் காஞ்​சிபுரத்​தில் 1974-ம் ஆண்டு முதல் செயல்​பட்டு வருகிறது. இதில் உற்பத்தி செய்​யப்​படும் ஜரிகை மார்க் (242 கிராம்) விலை தற்போது ரூ.23,075-க்கு விற்​கப்​படு​கிறது.

Jan 25, 2025 - 16:40
 0  3
காஞ்சிபுரம் ஜரிகை ஆலை பொலிவுடன் செயல்பட்டு வருகிறது: அமைச்சர் ஆர்.காந்தி விளக்கம்

காஞ்​சிபுரத்​தில் இயங்​கும் தமிழ்​நாடு ஜரிகை ஆலை பொலிவுடன் சிறப்பாக செயல்​பட்டு வருவதாக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.​காந்தி தெரி​வித்​துள்ளார்.

‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ஜன.22-ம்தேதி​யிட்ட இதழில் பொலிவை இழக்​கும் ஜரிகை உற்பத்தி: ஆலையை மீட்க என்ன வழி? என்ற தலைப்​பில் செய்தி வெளி​யாகி இருந்​தது. அது தொடர்பாக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.​காந்தி அளித்​துள்ள விளக்க கடிதத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழ்நாடு ஜரிகை லிமிடெட் காஞ்​சிபுரத்​தில் 1974-ம் ஆண்டு முதல் செயல்​பட்டு வருகிறது. இதில் உற்பத்தி செய்​யப்​படும் ஜரிகை மார்க் (242 கிராம்) விலை தற்போது ரூ.23,075-க்கு விற்​கப்​படு​கிறது. இதன் விலை நாள் தோறும் தங்கம் மற்றும் வெள்ளி விலை​யில் ஏற்படும் மாற்​றத்​துக்​கேற்ப விலை நிர்​ணயம் செய்​யப்​பட்டு வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow