தீபாவளி: டாஸ்மாக்கில் 3 நாட்களில் ரூ.789 கோடி வசூல்!

தமிழகத்தில் தீபாவளி மற்றும் அதற்கு முந்தைய சனி, ஞாயிற்றுக்கிழமையையும் சேர்த்து 3 நாட்களில் ரூ.789.85 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Oct 22, 2025 - 09:25
 0  3
தீபாவளி: டாஸ்மாக்கில் 3 நாட்களில் ரூ.789 கோடி வசூல்!

சென்னை: தமிழகத்தில் தீபாவளி மற்றும் அதற்கு முந்தைய சனி, ஞாயிற்றுக்கிழமையையும் சேர்த்து 3 நாட்களில் ரூ.789.85 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் தற்போது 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. தினமும் சராசரியாக ரூ.150 கோடிக்கு மது விற்பனையாகிறது. சனி, ஞாயிறு உள்ளிட்ட வார இறுதி நாட்களில் ரூ.200 கோடிக்கும் பண்டிகை காலங்களில் ரூ.250 கோடிக்கும் மது விற்பனை நடைபெறும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow