இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை: டெல்லியில் இன்று தொடக்கம்
அமெரிக்க வேளாண் விளைபொருட்கள், பால் பொருட்களுக்கான சந்தையை திறக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை இந்தியா ஏற்கவில்லை. இதனால் உடன்பாடு ஏற்படுவதில் தாமதம் ஏற்பட்டது.

புதுடெல்லி: இந்தியா, அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்துவது தொடர்பாக 5 சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், அமெரிக்க வேளாண் விளைபொருட்கள், பால் பொருட்களுக்கான சந்தையை திறக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை இந்தியா ஏற்கவில்லை. இதனால் உடன்பாடு ஏற்படுவதில் தாமதம் ஏற்பட்டது.
இதற்கு நடுவே, இந்திய பொருட்கள் மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 25% வரி விதித்தார். அத்துடன் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதாகக் கூறி வேறு எந்த நாட்டுக்கும் இல்லாத வகையில் கூடுதலாக 25 சதவீதம் வரி விதித்தார்.
What's Your Reaction?