சூலக்கல் மாரியம்மன் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும்
கோவை கிணத்துக்கடவை அடுத்துள்ள சூலக்கல், முன்பு ஒரு காலம் சிறந்த மேய்ச்சல் பகுதியாக இருந்துள்ளது. அவ்வூருக்குப் பக்கத்தில் உள்ள வேலாயுதம்பாளையம் என்னும் கிராமத்தைச் சேர்ந்த வேளாளர் ஒருவரின் பசுக்கள் வழக்கம்போல் இப்பகுதியில் மேய்ந்து வந்துள்ளன.

கோவை கிணத்துக்கடவை அடுத்துள்ள சூலக்கல், முன்பு ஒரு காலம் சிறந்த மேய்ச்சல் பகுதியாக இருந்துள்ளது. அவ்வூருக்குப் பக்கத்தில் உள்ள வேலாயுதம்பாளையம் என்னும் கிராமத்தைச் சேர்ந்த வேளாளர் ஒருவரின் பசுக்கள் வழக்கம்போல் இப்பகுதியில் மேய்ந்து வந்துள்ளன. மாலையில் அவற்றைப் பட்டியில் கொண்டு வந்து அடைக்கும் பணியை வேலைக்கார பையன்கள் செய்து வந்தனர்.
அவ்வாறு மேய்ந்து வந்த பசுக்களில் பால் குன்றுவதைக் கண்ட உழவர் பெருமக்கள் கவலை கொண்டனர். அவர்கள் மாட்டுக்காரப் பையன்களைக் கேட்டும் பயன் இல்லாததால், ஒருநாள் காட்டுக்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது பசுக்கள் ஓர் இடத்தில் கூட்டமாக இருந்ததைக் கண்டு அவற்றை விரட்டியுள்ளனர்.
What's Your Reaction?