சபரிமலையில் ஜன.14-ல் மகர விளக்கு பூஜை: பந்தளத்தில் இருந்து புறப்படுகிறது திருவாபரணம்
சபரிமலையில் வரும் 14-ம் தேதி நடைபெற உள்ள மகரவிளக்கு பூஜைக்காக, ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணம் பந்தளம் சாஸ்தா கோயிலில் இருந்து இன்று புறப்படுகிறது.

தேனி: சபரிமலையில் வரும் 14-ம் தேதி நடைபெற உள்ள மகரவிளக்கு பூஜைக்காக, ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணம் பந்தளம் சாஸ்தா கோயிலில் இருந்து இன்று புறப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் 14-ம் தேதி மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு மாலை 6.25-க்கு ஐயப்பனுக்கு திருவாபரணம் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து, பொன்னம்மபல மேட்டில் மகரஜோதி தரிசனம் நடைபெறும்.
What's Your Reaction?