சத்தீஸ்கரில் பழங்குடியின சிறுவர்களிடம் செல்போனில் கார்ட்டூன்களை காட்டிய சிஆர்பிஎப் வீரர்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்
சத்தீஸ்கர் வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின சிறுவர்களிடம், சிஆர்பிஎப் வீரர் ஒருவர் தனது செல்போனில் கார்ட்டூன்களை காட்டிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின சிறுவர்களிடம், சிஆர்பிஎப் வீரர் ஒருவர் தனது செல்போனில் கார்ட்டூன்களை காட்டிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.
நக்சல்கள் ஆதிக்கம் நிறைந்த மாநிலங்களில் ஒன்று சத்தீஸ்கர். வரும் 2026-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நக்சல்களை முற்றிலும் ஒழிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக பல்வேறு திட்டங்களை சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக சரணடையும் நக்சல்கள் கண்ணியமான வாழ்க்கையைத் தொடங்குவதற்கான உதவிகள் வழங்கப்படுகின்றன.
What's Your Reaction?