கோவை ஈஷா யோகா மைய வளாகத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலம்

ஈஷா வளாகத்தில் நேற்று மகா சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் முக்கியப் பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Feb 27, 2025 - 08:35
 0  3
கோவை ஈஷா யோகா மைய வளாகத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலம்

ஈஷா வளாகத்தில் நேற்று மகா சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் முக்கியப் பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கோவை ஈஷா யோகா மையத்தில் 31-வது ஆண்டு மகா சிவராத்திரி விழா நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கியது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். ஈஷா யோகா மைய வளாகத்துக்கு வந்த அவரை, ஈஷா நிறுவனர் சத்குரு வரவேற்று, ஈஷா மையத்தில் உள்ள பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று, அவ்விடங்களின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். சூர்ய குண்டம், நாக சன்னதி ஆகிய இடங்களுக்கு சென்று வழிபட்ட மத்திய அமைச்சர் அமித்ஷா, அங்கிருந்த நந்திக்கு தாமரையை அர்ப்பணித்தார். தொடர்ந்து, லிங்க பைரவி கோயிலில் வழிபட்ட அமித்ஷாவுக்கு, சத்குரு ருத்ராட்ச மாலையை அணிவித்தார். பின்னர், தியானலிங்கத்தில் சத்குரு தலைமையில் நடந்த பஞ்சபூத க்ரியையில் பங்கேற்ற அமித்ஷா, அங்கிருந்து ஆதியோகி சிலை அமைந்துள்ள இடத்துக்கு வந்து, யோகேஸ்வர லிங்கத்துக்கு கைலாச தீர்த்தத்தை ஊற்றி, வழிபாடு நடத்தினார். தொடர்ந்து, மகா சிவராத்திரி விழாவுக்கான யாக வேள்வியை தொடங்கிவைத்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow