குயிலி: திரைப் பார்வை - ஒரு பெண்ணின் பெருங்கோபம்!
மதுவுக்கு எதிராக இந்த ஆண்டு வெளியான படங்களில் ‘பாட்டில் ராதா’ மிக முக்கியமானதொரு படைப்பு. ‘குயிலி’ முற்றிலும் சிக்கலான பல விளிம்பு நிலைக் கதாபாத்திரங்களின் வழியாக மதுவுக்கு எதிராகப் போர்க்குரல் எழுப்பியிருக்கிறது.

மதுவுக்கு எதிராக இந்த ஆண்டு வெளியான படங்களில் ‘பாட்டில் ராதா’ மிக முக்கியமானதொரு படைப்பு. ‘குயிலி’ முற்றிலும் சிக்கலான பல விளிம்பு நிலைக் கதாபாத்திரங்களின் வழியாக மதுவுக்கு எதிராகப் போர்க்குரல் எழுப்பியிருக்கிறது.
ஒரு பின்தங்கிய கிராமத்தைச் சேர்ந்த குயிலி ஆடு மேய்ப்பதை வாழ்வாதாரமாகச் செய்துவரும் ஏழைக் குடும்பத்துப் பெண். அவளும் விளம்பரப் பலகைகள் எழுதும் வீராவும் கரம் பற்றுகிறார்கள். அவர்களுக்கு ஒரு மகன் பிறக்கிறான். அந்த எளிய, அமைதியான குடும்பத்தில் மது உள்ளே நுழையும்போது எல்லாம் தலைகீழாக மாறிப்போகிறது. மது கணவனின் உயிரைக் குடிக்க, உடைந்துபோகிறாள். தன்னைப் போல் சமூகத்தில் மதுவால் கணவனை இழந்த பெண்களின் கண்ணீரைக் காணும் குயிலியை அவளது கோபம் எந்த எல்லைக்கு அழைத்துக்கொண்டு போனது என்பது கதை.
What's Your Reaction?