கார்த்திகை | ஆயிரக்கணக்கான தீபங்களால் ஒளிர்ந்த ‘வாழும் கலை’ பெங்களூரு ஆசிரமம்
வாழும் கலை (ஆர்ட் ஆஃப் லிவிங்) பெங்களூரு ஆசிரமத்தில் கார்த்திகை தீபக் கொண்டாட்டம்m நடைபெற்றது. இதற்காக நேற்று (நவ.16) ஆயிரக்கணக்கான தீபங்கள் ஏற்றப்பட்டு ஆசிரமம் ஒளி மற்றும் பக்தியின் அற்புதமான காட்சியில் உயிர்பெற்றது.

பெங்களூரு: ‘வாழும் கலை' (ஆர்ட் ஆஃப் லிவிங்) பெங்களூரு ஆசிரமத்தில் கார்த்திகை தீபக் கொண்டாட்டம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதற்காக நேற்று (நவ.16) மாலை ஆசிரமத்தில் ஆயிரக்கணக்கான தீபங்கள் ஏற்றப்பட்டது. இதனால் ஆசிரமம் ஒளி மற்றும் பக்தியின் அற்புதமான காட்சியில் உயிர்பெற்றது.
கார்த்திகை தீபத்தின் காலத்தால் அழியாத செய்தியை அடிக்கோடிட்டுக் காட்டும் பக்தி மற்றும் கலாச்சார வெளிப்பாடு ஆகியவற்றின் சரியான கலவையாக இந்த நிகழ்வு இருந்தது.
What's Your Reaction?