கந்தசஷ்டி விழா நிறைவு; பழநி முருகனுக்கு கோலாகலமாக நடந்த திருக்கல்யாணம்
திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் கந்தசஷ்டி திருவிழாவின் நிறைவாக மலைக்கோயிலில் இன்று (வெள்ளிக்கிழமை) திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் கந்தசஷ்டி திருவிழாவின் நிறைவாக மலைக்கோயிலில் இன்று (வெள்ளிக்கிழமை) திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா நவ.2-ம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. பக்தர்களும் காப்புக்கட்டி விரதம் இருந்தனர். இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நேற்று (நவ.7) இரவு நடைபெற்றது. இதையடுத்து, சூரன்களை வதம் செய்து வெற்றி பெற்ற சண்முகருக்கு வள்ளி, தெய்வானையை மணம் முடித்து வைக்கும் வைபவம் இன்று வெள்ளிக்கிழமை (நவ.8) காலை மலைக்கோயிலில் நடைபெற்றது.
What's Your Reaction?