ஓர் ஆசிரியர் எப்படி உருவாகிறார்?
முதல் குழந்தை. பிறந்தவுடன் என்னை அள்ளி எடுத்து அப்பாவின் கைகளில் கொடுத்தார்கள். அவர் ஆசையோடு என்னைத் தூக்கி, என் காதுக்கு அருகில் குனிந்து, கிசுகிசுத்தார். ‘தா...தின்...தின்னா!’ அம்மாவிலிருந்து உடன் இருந்தவர்கள் எல்லாரும் திகைத்து நின்றுவிட்டார்களாம்.

முதல் குழந்தை. பிறந்தவுடன் என்னை அள்ளி எடுத்து அப்பாவின் கைகளில் கொடுத்தார்கள். அவர் ஆசையோடு என்னைத் தூக்கி, என் காதுக்கு அருகில் குனிந்து, கிசுகிசுத்தார். ‘தா...தின்...தின்னா!’ அம்மாவிலிருந்து உடன் இருந்தவர்கள் எல்லாரும் திகைத்து நின்றுவிட்டார்களாம்.
‘இதென்ன, வழக்கத்தை மாற்றுகிறீர்கள்? கடவுள் வழிபாட்டுப் பாடலை அல்லவா முதலில் குழந்தையின் காதில் நீங்கள் ஓத வேண்டும்? கடவுளின் பெயரைக் கேட்டபடி, அவரின் ஆசியைப் பெற்றுக்கொண்டு அல்லவா உங்கள் குழந்தை வளர வேண்டும்?’ அப்பா சிரித்தார். ‘இசைதான் என் கடவுள். தினமும் அந்தக் கடவுளைதான் வழிபட்டுக்கொண்டிருக்கிறேன். என் ஜாகிர் உசேன் தபலாவின் ஆசியோடு தன் வாழ்வைத் தொடங்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம்.’
What's Your Reaction?