ஓடிடி உலகம்: Officer on Duty - ஒரு கவரிங் செயின் அமளி!
கடந்த பிப்ரவரியில் திரையரங்குகளில் வெளியாகி கோடிகளை அள்ளிய ‘ஆபீசர் ஆன் டூட்டி’ படம், தற்போது நெட்ஃபிளிக்ஸில் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கிறது.

எவ்வளவு பழைய கதையை நீங்கள் கொடுத்தாலும் அதைத் திரைக்கதை எனும் மந்திரத்தால் வெற்றிப் படமாக்கும் வித்தையில் தொடர்ந்து அசத்தி வருகிறார்கள் மலையாள இயக்குநர்கள். கடந்த பிப்ரவரியில் திரையரங்குகளில் வெளியாகி கோடிகளை அள்ளிய ‘ஆபீசர் ஆன் டூட்டி’ படம், தற்போது நெட்ஃபிளிக்ஸில் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கிறது.
‘மலையாள சினிமாவில் போலீஸ் விசாரணைப் படங்களுக்கா பஞ்சம்! அட போங்கப்பா.. பத்தோடு இதுவும் ஒன்று’ என்று மட்டும் நீங்கள் கடந்து போய்விட முடியாது. அந்த அளவுக்குத் தொடக்கக் காட்சியிலிருந்தே நம்மைக் கட்டிப் போட்டு விடுகிறார்கள் அறிமுக இயக்குநர் ஜித்து அஷ்ரப் மற்றும் திரைக்கதையை எழுதியிருக்கும் ஷாஹி கபீர் ஆகிய இருவரும்.
What's Your Reaction?