ஒட்டன்சத்திரம் பகுதியில் பூத்துக் குலுங்கும் மருத்துவ குணமுள்ள செங்காந்தள் மலர்கள்!
அறுவடை நேரத்தில் ஒரு கிலோ ரூ.3,000 முதல் ரூ.5,000 வரை விற்பனையாகும். கண்வலி கிழங்குக்கு நிலையான விலை இல்லாததால், நுகர்வைப் பொறுத்து விலையில் ஏற்ற இறக்கத்துடன் விற்பனை செய்யப்படுகிறது.

பழநி: ஒட்டன்சத்திரம் பகுதியில் மருத்துவ குணமுள்ள செங்காந்தள் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. ஒட்டன்சத்திரம், கள்ளிமந்தையம், தும்பிச்சிப் பாளையம், அம்பிளிக்கை, இடையகோட்டை, பொருளூர் உள்ளிட்ட பகுதிகளில் செங்காந்தள் மலர் எனும் கண்வலி கிழங்கு அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. செங்காந்தள் மலர் மாநில அரசின் மலராகவும் உள்ளது.
இதன் கிழங்கு பல்வேறு மருத்துவ குணம் கொண்டதால், மருத்துவப் பயன்பாட்டுக்காக இங்கிருந்து வெளிநாடுகளுக்கும் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது, பொருளூரு, கள்ளிமந்தையம் பகுதிகளில் நடவு செய்யப்பட்டுள்ள கண்வலி கிழங்கு செடியில் செங்காந்தள் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.
What's Your Reaction?