ட்ரோன் மூலம் பூச்சி மருந்து தெளிக்க பழநி விவசாயிகள் ஆர்வம்!
பழநி பகுதியில் ஆளில்லா விமானம் எனப்படும் ‘ட்ரோன்’களை பயன்படுத்தி வயல்களில் பூச்சி மருந்து தெளிக்க விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். அதனால் ட்ரோன்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

பழநி: பழநி பகுதியில் ஆளில்லா விமானம் எனப்படும் ‘ட்ரோன்’களை பயன்படுத்தி வயல்களில் பூச்சி மருந்து தெளிக்க விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். அதனால் ட்ரோன்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
வடகிழக்குப் பருவமழை தொடங்கி உள்ளதால், பழநியில் மழையை எதிர்பார்த்து காத்திருந்த விவசாயிகள் தற்போது ஆர்வத்துடன் விவசாய பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது நெல், மக்காச்சோளம் உள்ளிட்ட விதைப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. வெளிநாடுகளில் ஆளில்லா விமானம் எனப்படும் ‘ட்ரோன்’ மூலம் உரம் மற்றும் பூச்சி மருந்துகளை வயல்வெளியில் தெளிக்கின்றனர்.
What's Your Reaction?