ஐந்தும் தணியும், ஆறும் பணியும் | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 6
உறங்கிக்கொண்டிருக்கும் இறைவனை எழுப்புதல் தான் திருப்பள்ளியெழுச்சி என்பதன் நேரடிப் பொருள். ஆனால், இறைவனை எவ்வாறு எழுப்ப இயலும்? அவன் எப்போதும் அறிதுயில் எனப்படும் யோக நித்திரையில் இருப்பவன் அல்லவா?

உறங்கிக்கொண்டிருக்கும் இறைவனை எழுப்புதல் தான் திருப்பள்ளியெழுச்சி என்பதன் நேரடிப் பொருள். ஆனால், இறைவனை எவ்வாறு எழுப்ப இயலும்? அவன் எப்போதும் அறிதுயில் எனப்படும் யோக நித்திரையில் இருப்பவன் அல்லவா?
எனில், திருப்பள்ளியெழுச்சி என்பதற்கு நமக்குள் உறங்கிக்கொண்டிருக்கும் இறையுணர்வைத் தட்டி எழுப்புதல் என்பதுதான் உண்மையான பொருள். நமக்குள் ஆணவம் என்னும் திரை விலகும்போது தான் இது சாத்தியமாகிறது. உள்ளே மறைந்திருக்கும் இறைவன் முதன்முதலாக வெளியே வருதல் மனித மனத்துக்கு ஒரு மாபெரும் கொண்டாட்டம். இறைவன் வெளிப்பட்ட அந்தப் பொற்கணத்தைத் தொண்டரடிப்பொடியாழ்வார் பாடிப் பாடி மகிழ்கிறார்.
What's Your Reaction?