‘உலகில் இனி எந்த டி20 லீகுகளிலும் ஆட மாட்டேன்’ - ஹாரி புரூக் திட்டவட்டம்
இங்கிலாந்து வெள்ளைப்பந்து அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டதையடுத்து உலகில் இனி எந்தவொரு தனியார் டி20 லீக் தொடர்களிலும் ஆடப்போவதில்லை, இங்கிலாந்து தான் என் அணி என்று ஹாரி புரூக் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து வெள்ளைப்பந்து அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டதையடுத்து உலகில் இனி எந்தவொரு தனியார் டி20 லீக் தொடர்களிலும் ஆடப்போவதில்லை, இங்கிலாந்து தான் என் அணி என்று ஹாரி புரூக் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2025-ம் ஆண்டு சீசனுக்கான ஏலத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஹாரி புரூக்கை ரூ.6.25 கோடிக்கு ஏலம் எடுத்தது. இங்கிலாந்து அணி சாம்பியன்ஸ் டிராபியில் வெளியேறியதைத் தொடர்ந்து அனைத்து தனியார் டி20 போட்டிகளிலிருந்தும் விலகப்போவதாக அவர் முடிவெடுத்தார். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்தும் ஹாரி புரூக் தன் பாட்டியின் இறப்பு காரணமாக விலகினார்.
What's Your Reaction?