‘உண்மை புரியாமல் தீர்ப்பு வழங்க வேண்டாம்’ - நடிகை பார்வதிக்கு இயக்குநர் பதில்
மலையாள சினிமாவில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்குஎதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரிக்க, நீதிபதி ஹேமா தலைமையில் ஒரு கமிட்டியை கேரள அரசு அமைத்தது

மலையாள சினிமாவில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்குஎதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரிக்க, நீதிபதி ஹேமா தலைமையில் ஒரு கமிட்டியை கேரள அரசு அமைத்தது. இந்த கமிட்டி தனது அறிக்கையை கேரள முதல்வரிடம் சமர்ப்பித்தது. கடந்த வருடம் ஹேமா கமிட்டியின் ஒரு பகுதி வெளியாகிப் பரபரப்பானது. அதன்பின்னர் சில நடிகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை சில நடிகைகள் வெளிப்படையாகக் கூறினர். அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் ஹேமா கமிட்டி அறிக்கையுடன் தொடர்புடைய வழக்குகளை மூட கேரள போலீஸார் முடிவு செய்துள்ளதாகச் செய்திகள் வெளியானது. இதைக் கேலி செய்து நடிகை பார்வதி திருவோத்து அரசுக்கு கேள்வி எழுப்பினார்.
What's Your Reaction?