உணவுச் சுற்றுலா: மஸ்கோத் அல்வா
அல்வா பிடிக்காதவர்கள் யாராவது இருப்பார்களா! அதிலும் புது புதுச் சுவைகளில் கிடைக்கும் அல்வா ரகங்களை ருசிப்பதே கொண்டாட்டம்தான்!

அல்வா பிடிக்காதவர்கள் யாராவது இருப்பார்களா! அதிலும் புது புதுச் சுவைகளில் கிடைக்கும் அல்வா ரகங்களை ருசிப்பதே கொண்டாட்டம்தான்!
அல்வா என்றாலே நெய்யின் மணமும் சுவையும் தூக்கலாக இருக்கும். ஆனால், நெய்யின் ஆதரவின்றி ஓர் அல்வா தயாரிக்கப்படுகிறது என்றால், அது மஸ்கோத் அல்வாதான்.அல்வா என்றாலே நினைவுக்கு வருவது திருநெல்வேலி அல்வாதான். அதே திருநெல்வேலி மாவட்டத்தில்தான் இந்த மஸ்கோத் அல்வாவும் பிரபலம்! திசையன்விளை எனும் சிறு நகரத்தில் விவசாய நிலங்களும் வாழைத் தோப்புகளும் ஊருக்கு அழகு சேர்க்கின்றன. அங்கிருக்கும் முதலூர் எனும் அழகிய கிராமத்தில்தான் மஸ்கோத் அல்வா பிரசித்தம்.
What's Your Reaction?