இரவு விருந்துக்கு வராததால் உயிர் தப்பிய கர்னல் கில்லெஸ்பி - வேலூர் கோட்டை சிப்பாய் புரட்சியின் சுவாரசிய தகவல்

ஜூலை 9-ம் தேதி இரவு வேலூர் கோட்டையில் கர்னல் பேன்கோர்ட் அளித்த இரவு விருந்தில் கடைசி நேரத்தில் பங்கேற்காததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனார் என்ற சுவாரசிய தகவல் தெரியவந்துள்ளது

Jul 11, 2025 - 16:40
 0  4
இரவு விருந்துக்கு வராததால் உயிர் தப்பிய கர்னல் கில்லெஸ்பி - வேலூர் கோட்டை சிப்பாய் புரட்சியின் சுவாரசிய தகவல்

வேலூர் கோட்டையில் கடந்த 1806-ம் ஆண்டு ஜூலை 10-ம் தேதி நடைபெற்ற சிப்பாய் புரட்சியை 7 மணி நேரத்துக்குள் கட்டுக்குள் கொண்டுவந்த சர் ராபர்ட் ரோலோ கில்லெஸ்பி, ஜூலை 9-ம் தேதி இரவு வேலூர் கோட்டையில் கர்னல் பேன்கோர்ட் அளித்த இரவு விருந்தில் கடைசி நேரத்தில் பங்கேற்காததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனார் என்ற சுவாரசிய தகவல் தெரியவந்துள்ளது.

கடந்த 1799-ல் நான்காம் மைசூர் போரில் திப்பு சுல்தான் கொல்லப்பட்ட பிறகு அவரது குடும்பத்தினர் அனைவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள், அனைவரும் பலத்த பாதுகாப்புடன் வேலூர் கோட்டையில் சிறை வைக்கப் பட்டனர். வேலூர் கோட்டை பாதுகாப்பு பணியில் 4-வது படை பிரிவின் 2-வது இந்திய காலாட்படை வீரர்கள் இருந்தனர். 1806-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஆங்கிலேய ராணுவத்தில் பணியாற்றிய இந்திய வீரர்களுக்கான புதிய சீருடை திருத்த விதிகள் அமல்படுத்தப்பட்டன. இதை ஏற்காத இந்து மற்றும் இஸ்லாமிய வீரர்கள், ஆங்கிலேயர்கள் தங்களை மதமாற்றம் செய்ய முயற்சிப்பதாக கருதினர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow