இந்திய பாதுகாப்பு துறை ஏற்றுமதி ரூ.21,000 கோடியை தாண்டி சாதனை: ராஜ்நாத் சிங் தகவல்

இந்தியா பாதுகாப்பு துறையின் ஏற்றுமதி ரூ.21,000 கோடியை கடந்து சாதனை படைத்துள்ளதாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

Dec 31, 2024 - 03:20
 0  5
இந்திய பாதுகாப்பு துறை ஏற்றுமதி ரூ.21,000 கோடியை தாண்டி சாதனை: ராஜ்நாத் சிங் தகவல்

இந்தியா பாதுகாப்பு துறையின் ஏற்றுமதி ரூ.21,000 கோடியை கடந்து சாதனை படைத்துள்ளதாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இரு நூற்றாண்டு பழமையான மோவ் கன்டோன்மெண்ட் ராணுவ போர் கல்லூரியில் (ஏடபிள்யுசி) அதிகாரிகள் இடையே அவர் நேற்று பேசியதாவது: நமது பாதுகாப்பு துறையின் ஏற்றுமதி பத்தாண்டுகளுக்கு முன்பு ரூ.2,000 கோடி என்ற அளவில் இருந்தது. இது. தற்போது ரூ.21,000 கோடியை கடந்துள்ளது. வரும் 2029-ம் ஆண்டுக்குள் ரூ.50,000 கோடி ஏற்றுமதியை தொட்டுவிட வேண்டும் என்பதே நமது இலக்கு.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow