இந்திய தொழில்முனைவோரின் திறமை வியப்பை ஏற்படுத்துகிறது: டான்சானியா, ஜார்ஜியா தொழில்முனைவோர் கருத்து
தமிழக அரசு சார்பில் கோவையில் எம்எஸ்எம்இ தொழில் வளர்ச்சிக்கு உதவும் வகையில், வாங்குவோர்- விற்போர் சந்திப்பு நிகழ்ச்சி கோவையில் 2 நாட்கள் நடந்தது. இதில் வெளிநாடுகளை சேர்ந்த தொழில் துறையினர் பலர் பங்கேற்றனர்.

கோவை: தமிழக அரசு சார்பில் கோவையில் எம்எஸ்எம்இ தொழில் வளர்ச்சிக்கு உதவும் வகையில், வாங்குவோர்- விற்போர் சந்திப்பு நிகழ்ச்சி கோவையில் 2 நாட்கள் நடந்தது. இதில் வெளிநாடுகளை சேர்ந்த தொழில் துறையினர் பலர் பங்கேற்றனர். இதுகுறித்த அனுபவத்தை ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் பகிர்ந்துகொண்டனர்
ஜார்ஜியா நாட்டில் செயல்படும் ‘அல்வாதி’ என்ற ஆட்டோ மொபைல் உதிரிபாகங்கள் உற்பத்தி நிறுவனத்தின் அதிகாரி அமரா கூறும் போது, “எங்கள் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படும் உதிரிபாகங்கள் பெரும்பாலும் ஐரோப்பிய நாட்டு கார்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இந்தியா பெரிய சந்தை என்பதால் எதிர்வரும் காலங்களில் இந்திய கார்களுக்கும் விநியோகிக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. தொழில்துறையில் இந்தியா சிறந்து விளங்குகிறது. இருநாடுகளுக் கிடையே நட்புறவை அதிகரிக்க இதுபோன்ற நிகழ்ச்சி்கள் உதவுகின்றன.
What's Your Reaction?