இது தென்கொரிய போலீஸின் ‘அசாதாரண சம்பவம்’ - பதவி இழந்த அதிபரின் கைதும் பின்னணியும்!

தென் கொரியாவின் பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிபர் யூன் சாக் யோல்-ஐ கைது செய்ய கடந்த டிசம்பர் 31ம் தேதி நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்ட நிலையில், மிக நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு இன்றுதான் அவர் கைது செய்யப்பட்டார். 

Jan 15, 2025 - 21:50
 0  5
இது தென்கொரிய போலீஸின் ‘அசாதாரண சம்பவம்’ - பதவி இழந்த அதிபரின் கைதும் பின்னணியும்!

சீயோல்: தென் கொரியாவின் பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிபர் யூன் சாக் யோல் மீதான கைது நடவடிக்கைக்கு கடந்த டிசம்பர் 31ம் தேதியே நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்ட நிலையில், மிக நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு இன்றுதான் அவர் கைது செய்யப்பட்டார். தான் கைது செய்யப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை யூன் சாக் யோல் மேற்கொண்டிருந்த நிலையில், அனைத்து ஏற்பாடுகளையும் தாண்டி இன்று (ஜன.15) அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், அவரை கைது செய்தது காவல் துறையினருக்கு அத்தனை எளிதானதாக இருக்கவில்லை.

கடந்த டிசம்பர் 3-ம் தேதி தென் கொரியாவில் ராணுவ சட்டத்தை அமல்படுத்தினார் அதிபர் யூன் சாக் யோல். இந்தச் சட்டத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த சட்டத்தை அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. டிசம்பர் 4-ம் தேதி நாடாளுமன்றத்தில் 6 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சுமார் 190 உறுப்பினர்கள், யூன் சாக் யோலை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தைக் கொண்டு வந்தனர். இதன் மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 7 அன்று நடைபெற்றது. தீர்மானம் வெற்றி பெற 200 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், பிபிபி கட்சியின் புறக்கணிப்பு காரணமாக 195 பேரின் ஆதரவு மட்டுமே கிடைத்தது. இதனால், 5 வாக்குகள் குறைந்ததால், தீர்மானம் தோல்வி அடைந்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow