உள்நாட்டு ஆயத்த ஆடை உற்பத்தியை பயன்படுத்த சில்லரை விற்பனை நிறுவனங்களுக்கு வலியுறுத்தல்

நடப்பு நிதியாண்டின் முதல் எட்டு மாதங்களில் ரூ.8,900 கோடி மதிப்பிலான ஆயத்த ஆடைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.  இறக்குமதியை குறைக்க, சில்லறை விற்பனை நிறுவனங்கள் இந்திய ஜவுளிப்பொருட்கள் விற்பனையை ஊக்குவிக்க வேண்டும் என, இந்திய ஜவுளித் தொழில்முனைவோர்  கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. 

Jan 15, 2025 - 21:25
 0  2
உள்நாட்டு ஆயத்த ஆடை உற்பத்தியை பயன்படுத்த சில்லரை விற்பனை நிறுவனங்களுக்கு வலியுறுத்தல்

கோவை: நடப்பு நிதியாண்டின் முதல் 8 மாதங்களில் ரூ.8,900 கோடி மதிப்பிலான ஆயத்த ஆடைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இறக்குமதியை குறைக்க, சில்லறை விற்பனை நிறுவனங்கள் இந்திய ஜவுளிப் பொருட்கள் விற்பனையை ஊக்குவிக்க வேண்டும் என இந்திய ஜவுளித் தொழில்முனைவோர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து ‘ஐடிஎப்’ தொழில் அமைப்பின் கன்வீனர் பிரபு தாமோதரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடப்பு நிதியாண்டின் முதல் எட்டு மாதங்களில் (ஏப்ரல் முதல் நவம்பர் வரை) மட்டும் 1.07 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.8,900 கோடி) மதிப்பிலான ஆயத்த ஆடைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. வங்கதேசம், சீனா, ஸ்பெயின், வியட்நாம் நாடுகளில் இருந்து அதிகளவு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. மாதாந்திர கணக்கின்படி நடப்பு நிதியாண்டில் ரூ.13,000 கோடி மதிப்பில் ஆயத்த ஆடை இறக்குமதி செய்ய வாய்ப்பு உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow