ஆனைமலை மாசாணியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
ஆனைமலை மாசாணியம்மன் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் பங்கேற்றனர்.

பொள்ளாச்சி: ஆனைமலை மாசாணியம்மன் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் பங்கேற்றனர்.
தமிழகத்தில் அம்மன் ஆலயங்களில் ஆனைமலை மாசாணியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களை சேர்ந்த பக்தர்கள் தரிசனத்திற்காக வந்து செல்வார்கள். வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும். மாசாணியம்மன் சயன கோலத்தில் காட்சி அளிப்பதால் இங்கு வைக்கும் வேண்டுதல்கள் நிறைவேறுவதாக பக்தர்களுக்கு நம்பிக்கை உள்ளது.
What's Your Reaction?